என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
    X

    ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

    • ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும் சங்க கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்
    • ஓய்வு ஊதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அரச சலுகைகள் காலதாமதம் இன்றி வழங்க அரசை கேட்டுக்கொள்வது

    கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வு பெற்ற சீருடை பணயாளர்கள் காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை பணியாளர்கள் சங்க புதிய மாவட்ட நிர்வாகிகளாக கீழ்கண்டவாறு தேர்தெடுக்கப்பட்டது தலைவராக ஓய்வு டி.எஸ். பி. ராமர்த்தி, செயலாளராக கே.ராஜகோபால் எஸ்.ஐ. (ஓய்வு), பீ.மாரப்பன், எஸ்.ஐ. (ஓய்வு) பொருளராகவும், துணைத்தலைவராக ரபேல்ரெட்டி வனத்துறை ஏ.சி.எப். (ஒய்வு) ஆகியோர் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.அதன் பின் நடந்த பொது குழ கூட்டம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் அருகே உள்ள சங்க கட்டிடத்தில் ஓய்வு டி.எஸ்.பி ராமமூர்த்தி மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது

    ஓய்வுபெற்ற டி.எஸ்.பி, ஞானசேகரன், ("ஓய்வு) ஏ.டி.எஸ்.பி., எஸ்.கே.தன்ராஜ், வேணுகோபால் டி.எஸ்.பி (ஓய்வு) மகளிர் அணி சூரியகலா ஏ.டி.எஸ்.பி.(ஓய்வு) ஆகியோர்முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் கே.ராஜகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும் சங்க கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும், சங்கம் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது ஓய்வு ஊதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அரச சலுகைகள் காலதாமதம் இன்றி வழங்க அரசை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட சமுகநலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்று அனைத்து துறை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் துரை உட்பட 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜகோபால் பிறந்தநாளை முன்னிட்டு சங்க அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது இறுதியாக மாவட்ட பொருளாளர் பீ.மாரப்பன் அனைவருக்கும் நன்றி கூறினர்.

    Next Story
    ×