என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்
- ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில் ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் பொப்பிடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் அரசு அனுமதி இன்றி செம்மண் அள்ளுவது தெரிய வந்தது. இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






