search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி நீச்சல் குளத்தில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
    X

    நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

    தருமபுரி நீச்சல் குளத்தில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

    • மாணவ, மாணவிகள் பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் இருந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள நீச்சல் பயிற்சி தேவைப்படுகிறது.
    • 12 நாட்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் பயிற்சி கட்டணமாக ரூ. 1200 ஜி.எஸ்.டி 18 சதவீதம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குட்பட்ட நீச்சல் குளம் தருமபுரி இலக்கியம்பட்டியில் அமைந்துள்ளது.

    இந்த நீச்சல் குளத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாணவ மாணவிகள் என அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

    மாணவ, மாணவிகள் பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் இருந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள நீச்சல் பயிற்சி தேவைப்படுகிறது.

    இதன் அடிப்படையில் தற்போது மாணவ, மாணவி களுக்கு கோடை விடுமுறை காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அந்த வகையில் முதற்கட்ட பயிற்சியானது முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி வரும் 9-ம் தேதியும் 3-ம் கட்ட பயிற்சி வரும் 23-ம் தேதியும் தொடங்க இருப்பதால் 8 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாண விகள் நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்டு பயன டைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறந்த பயிற்சி யாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியானது காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரை என மூன்று பிரிவுகளாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    12 நாட்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் பயிற்சி கட்டணமாக ரூ. 1200 ஜி.எஸ்.டி 18 சதவீதம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×