search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு- தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை
    X

    மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு- தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
    • கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள கடலோர கிராமங்களான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, எடையூர், சுலேரிக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் கேட்டபோது:-

    இந்த கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது., பாறைகளை கொட்டி தூண்டில் வளைவு அமைத்தால் மீன்பிடி படகுகளை கடலின் கரையோரம் பாதுகாப்பாக கட்டி நிறுத்தி வைக்க முடியும். மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எங்களால் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்ப முடியும் என்றனர்.

    Next Story
    ×