என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கி பாராட்டினர்.
    • பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவா சராவ் மேனிலைப்பள்ளியில் ஜே.சி. போஸ் அறிவியல் மன்றத்தின் அறிவியல் கண்காட்சி நடந்தது.

    கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் அனந்த ராமன் தொடங்கி வைத்து மாணவ மாணவி களின் அறிவியல்செயல்தி றனைப் பாராட்டிப் பேசினார்.

    பின்னர்,மாணவர்களின் முயற்சியில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒளி விலகல், புவி அமைப்பு, பருவநிலை மாற்றம், சூரிய சந்திர கிரகணம், மனித உறுப்பு மண்டலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் முதலிய 15க்கு மேற்பட்ட அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கிச் சொல்லக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்.

    மேலும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் நடந்த 17 வயதினருக்கிடையேயான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, திருவண்ணா மலையில் நடக்கும் மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ள மாணவன் அஜித்திற்கு பள்ளி செயலர் ரஞ்சன்கோபால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து 28ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிற மாநிலதடகளப் போட்டியில் கலந்துகொள்ள மாணவர் அஜித் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிகழ்ச்சிகளில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×