search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் ஆசிரியர் கைது
    X

    பள்ளியில் பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் ஆசிரியர் கைது

    • பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக சகாய டோனிவளவன் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலை அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கண்டமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த சகாய டோனிவளவன் என்பவர் பணிபுரிகிறார். இவர் இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் டோனி வளவன் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி எந்த பதிலும் அளிக்காத போதிலும் டோனிவளவன் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த தகவல் கிடைத்ததும் சமூக அமைப்பினர் பள்ளி தாளாளரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×