என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
    X

    மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்த குழந்தைகளை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்ற குழந்தைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.

    திண்டுக்கல்:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. இன்றுகாலையிலும் மழை தொடர்ந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டது.

    ஆனால் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர். சிறிய குழந்தைகளை பெற்றோர்கள் பைக்கில் அமரவைத்து சிரமத்துடன் பள்ளியில் வந்து விட்டுச்சென்றனர். ஒரு சில பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இருந்தபோதும் குழந்தைகள் அந்த நீரை கடந்து வகுப்பறைக்கு சென்றனர்.

    மழை காரணமாக காலையில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனையும் கடந்து மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு வந்தனர்.

    Next Story
    ×