என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு கல்வி உதவித்தொகை
    X

    சிறுமிக்கு கல்வி உதவித்தொகை

    • பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார்.
    • மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 12-வது வார்டு பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி(வயது 28). கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வனிதா(8), தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    கடந்த நவம்பர் 18-ம்தேதி, பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 12-வது வார்டு கவுன்சிலர் பிரேமா சேகர் , 14-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட் செய்து அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை பேரூராட்சிதலைவர் சீனிவாசன் முன்னிலையில், சிறுமியின் தாய் ராணி யிடம் வழங்கினர்.

    Next Story
    ×