என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகள் நடும் விழா
    X

    மரக்கன்றுகள் நடும் விழா

    • 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் தமிழக முதல் -அமைச்சர் அறிவித்தார்.
    • ஒசூர் - தேன்கனிக்கோட்டை வழி, தளி சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை நெடுஞ்சாலைதுறை மூலம் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என மானிய கோரிக்கையில் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்துக்குட்பட்ட ராயக்கோட்டை சாலை மற்றும் ஒசூர் - தேன்கனிக்கோட்டை வழி, தளி சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

    இதில் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் திருமால் செல்வன், உதவி பொறியாளர் மன்னர் மன்னன், இளநிலை பொறியாளர் டேவிட், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×