என் மலர்
உள்ளூர் செய்திகள்

சந்தூர் அரசு பள்ளியில் மருத்துவ முகாம்
- சந்திரசேகரா மருத்துவ மனையுடன்இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர்.
- செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் கஜேந்திரன், சிவசங்கரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டாகரம் ஊராட்சி சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓலா நிறுவனமும், ஒசூர் சந்திரசேகரா மருத்துவமனையும் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர்.
முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஓலா நிறுவன அதிகாரிகள் ஜெயராமன், தனுஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,
இம்முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், இதில் மருத்துவர்கள் ஆசிக், ப்ரித்தி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் கஜேந்திரன், சிவசங்கரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
Next Story






