search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
    X

    நங்காஞ்சியாற்றில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

    • நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.
    • ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூரில் இருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிறு ஓடையாக வரும் நீர் ஆறாக மாறி வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு வருகிறது.

    ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 பெரிய கண்மாய்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.

    இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த அணை நிரம்பியவுடன் கரூர் அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு போக கடலில் கலக்கிறது.

    இந்நிலையில் இடையக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்று ஓரங்களில் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நங்காஞ்சியாற்றில கலப்பதால் மாசடைந்து சாக்கடை போல் மாறி பல இடங்களில்தேங்கி நிற்கிறது.

    மேலும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது.

    இது குறித்து இடையக்கோட்டை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வக்கீல் கதிரவன் கூறியதாவது:- கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் ஓரங்களில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற அந்த அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    Next Story
    ×