என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
- தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக ங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கால்வாய் சந்தைமேடு செல்லும் பாலத்தில் தூர்ந்து போனது. இதனால் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவு நீர் கால்வாய் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்