search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு
    X

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கார்த்திகை தீபத்திருவிழா நாளை (6- ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள், பெண்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இன்று சேலத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள், மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விற்பனை வழக்கத்தைவிட விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-

    மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.600, காக்கட்டான் - ரூ.500, கலர் காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.140, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.140, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாரத்தில் எதிர்வரும் நாட்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×