என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
- கடந்த 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது
- 2023-ம் ஆண்டிற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:-சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" கடந்த 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், விருதும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது முதல்-அமைச்சரளால் தேர்வு செய்யப்படுகிறார்.2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.தங்களது விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.09.2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண் 110-ல் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ அணுகுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.






