என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ்
- சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
- வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு வருடந்தோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இவர்கள் தங்குவதற்காக, ஏற்காட்டில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிக்கான உரிமை கட்டணம் செலுத்த, ஏற்காடு ஊராட்சிமன்றம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீசில், ஏற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகள், விடுதி உரிமை கட்டணம் மற்றும் கட்டிட வரைப்படம் ஆகியவைகளை நோட்டீஸ் பெற்ற 7 தினங்களுக்குள் ஊராட்சி மன்ற அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story






