search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்சாரம்மன் சமேத வேடியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    அம்சாரம்மன் சமேத வேடியப்பன் கோவில் கும்பாபிஷேகம்

    • வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடப்பட்டது.

    தொடர்ந்து நேற்று காலை வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து இன்று காலை உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. அதன் பிறகு மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூைஜ, மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், குல பங்காளிகள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×