search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  களை கட்டிய தீபாவளி விற்பனை  திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    சேலம் கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டம்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் களை கட்டிய தீபாவளி விற்பனை திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நகரங்களில் வசித்து வருபவர்கள், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக தங்களது குடும்பத்தினருடன் ஊர்களுக்கு சென்ற வண்ணமாக இருக்கிறார்கள்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பயணிகள் வசதிக்காக சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களாகவே கடை வீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. சேலம் முக்கிய வீதிகளில் தீபாவளி வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, ஏஏ ரோடு, இஇ ரோடு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழாபோல காட்சியளித்தது.

    ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்கு வதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர்.

    சிறு, சிறு ஜவுளிக்க டைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சாலையோர தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதியிலும் அதிகளவில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருவதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

    மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர். தீபாவளி பண்டி கையை முன்னிட்டு சேலம் நகரில் பட்டாசு கடைகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வியாபாரம் தொடங்கி உள்ளது. குழந்தைகள் பலர் தங்களது பெற்றோரை அழைத்து வந்து பட்டாசுகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. சேலம் மாநகரில் உள்ள இனிப்பு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. மக்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை தங்களது வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

    ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, எடப்பாடி உள்ளிட்ட புறநகரப்பகுதிகளிலும் தீபாவளி விற்பனை காரண மாக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

    நாமக்கல் கடைவீதி, பிரதான சாலை, சேலம் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஜவுளி மற்றும் நகைகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×