search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பள உயர்வு - தொழிலாளர் துறையிடம் முறையிட பாத்திர தொழிலாளர்கள் முடிவு
    X

    சம்பள உயர்வு - தொழிலாளர் துறையிடம் முறையிட பாத்திர தொழிலாளர்கள் முடிவு

    • தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தேவராஜ் (ஏ.டி.பி.,), குப்புசாமி (சி.ஐ.டி.யு.,), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), ரத்தினசாமி (எல்.பி.எப்.,), அசோக் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் புதிய சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடந்த டிசம்பர் மாதம் 31ந் தேதி கடிதம் கொடுக்கப்பட்டது.கடிதத்திற்கு பதில் வராத காரணத்தால், பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை சுமூகமாக முடிக்க திருப்பூர் தொழிலாளர் துணை ஆணையரை சந்தித்து கடிதம் கொடுப்பது, தொடர்ந்து, அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டம் கூட்டி, தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×