search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாம்புவானோடை தர்காவில் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி
    X

    கொடி இறக்கும் நிகழ்ச்சியில் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

    ஜாம்புவானோடை தர்காவில் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி

    • மதங்களை கடந்து சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
    • இரவு 9 மணிக்கு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ருக் (அன்னதானம்) வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்காவில் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடை பெற்றது. கொட்டும் மலையிலும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தர்கா பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மதங்களைக் கடந்து சாதி மத வேறு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    8.12.22 வியாழக்கிழமை மஹாரிபு தொழுகைக்குப் பின் புனித திருக்குர்ஆன் ஷரிப் ஓதி தமாம் செய்து ஆண்டவரின் புனித மௌலது ஷரிப் ஓதி துவா செய்து இரவு 9 மணிக்கு புனிதக் கொடி இறக்கப்பட்டது. அனைவ ருக்கும் தப்ருக் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இறுதியில் முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்த அனைத்து தரப்பு

    மக்களுக்கும் ஊடகத்து றைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒத்து ழைப்பு தந்த அனைவருக்கும் தர்கா நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×