என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை ஆர்.டி.ஓ எச்சரிக்கை
    X

    கொடைக்கானல் நகர்பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    கொடைக்கானலில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை ஆர்.டி.ஓ எச்சரிக்கை

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்காக பாறைகள், மலைக்குன்றுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன.
    • குறிப்பாக வெடி வைத்து பாறைகள் உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்காக பாறைகள், மலைக்குன்றுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகள் அமைத்து சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ ராஜா கூறியதாவது, கொடைக்கானல் மலைப்பகுதியில் பாறைகள் உடைக்க அனுமதி கிடையாது. குறிப்பாக வெடி வைத்து பாறைகள் உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் மற்றும் வில்பட்டி பகுதிகளில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவதாக தெரிகிறது.

    இந்த பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அடுத்து சுரங்க துறையினர் மூலம் இந்தப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    அதேபோல கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து கடைகளை அகற்றாவிடில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×