என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ரூ.1 லட்சம் தந்தால் ரூ.2.25 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.89 லட்சம் மோசடி
- ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 120 நாட்களில் ரூ.2.25 லட்சம் வட்டியுடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.89லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டி என்றாலும் பணத்திற்கான பாதுகாப்பு இருக்கும். எனவே அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வடமதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு நண்பர் மனோஜ்குமார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்த சையது பாரூக் என்பவர் அறிமுகமானார்.
இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தி, மனோஜ்குமார், அகமதுபயாஸ், ஜாகீர் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 120 நாட்களில் ரூ.2.25 லட்சம் வட்டியுடன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவருக்கு தெரிந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் முதலீடு ெசய்ய அறிவுறுத்தினார். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் ரூ.89 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் வட்டியுடன் பணத்தை தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் முறையான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து வேடசந்தூர் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது. நீதிபதி உத்தரவுப்படி வடமதுைர போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முறையாக பதிவு செய்யாத பைனான்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் போலீசாரும் இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்களிடம் மோசடி என்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டி என்றாலும் பணத்திற்கான பாதுகாப்பு இருக்கும். எனவே அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






