என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை வழக்கு:   வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது
    X

    ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை வழக்கு: வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது

    • ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை போன வழக்கு.
    • வெளிமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டது.

    ஓசூர்,

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாவிலிருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டைனர் லாரியில் கொண்டுசெல்லப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேரனஹள்ளி நெடுஞ்சாலையில் அந்த லாரியை கடந்த 2020-ம் ஆண்டு மர்ம கும்பல் கடத்தியது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.4லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் சவுகான்,சஞ்சய், நிகல்சிங், புராசவுகன் உள்ளிட்ட மேலும் 4 பேரை சூளகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×