என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
- பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம்.
- ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். மண்பாண்டம் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சென்று தங்கினார். இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பிரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






