search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜீப்பில் கடத்திய ரூ.1 லட்சம்   புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    ஜீப்பில் கடத்திய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • 550 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
    • தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் முரளி மற்றும் போலீசார் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றில் வந்த நபர் போலீசை கண்டவுடன் ஜீப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

    இதையடுத்து ஜீப்பில் சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 550 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    அந்த பொருட்களையும், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×