search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது
    X

    பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது

    • சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் ஒத்தக்கடையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த சில ரவுடிகள் சமூக வலைதளத்தில் அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிச்சியத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டான்.

    அதில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

    எனவே இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் அஜித்குமார் ஒத்தக்கடையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இவன் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகரில் மட்டும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    Next Story
    ×