search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் நீட்டிப்பு, கூடுதல் பஸ் வசதி
    X

    அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் நீட்டிப்பு, கூடுதல் பஸ் வசதி

    • புதியவழித்தடம் மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • கூடுதல் நடை பஸ் இயக்கத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஊத்தங்கரை தாலுகாவில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்களின்வழித்தடம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்கத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா திருப்பத்தூர் சாலையில் சேலம்கோட்டம் தர்மபுரி மண்டல தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில்கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பெறும் வகையில் புதியவழித்தடம் மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், பர்கூர்டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகயோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில ்போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு,கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் இரா.பொன்முடி,தர்மபுரி மண்டல பொது மேலாளர் எஸ்.ஜீவரத்தினம், துணை மண்டல மேலாளர் அரவிந்தன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்டஊராட்சிக் குழுத்தலைவர் மணிமேகலைநாகராஜ், கிளை மேலாளர் சீனிவாசன், தொழில் நுட்ப துணை மேலாளர் கலைவாணன், ஊத்தங்கரை ஒன்றியக்குழுத் தலைவர் உஷாராணிகுமரேசன், துணை தலைவர் சத்தியவாணி செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ரஜினிசெல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கதிரவன், தாசில்தார் திருமலைராஜன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுபோக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×