search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டலம் ஐயப்பன் கோவிலில் கொள்ளை முயற்சி
    X

    தண்டலம் ஐயப்பன் கோவிலில் கொள்ளை முயற்சி

    • ஐயப்பன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மூலவர் ஐம்பொன் சிலை மற்றும் செப்பு வெண்கல சிலைகள் கோவில் வளாகத்திலேயே ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் சென்றதும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    Next Story
    ×