என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்
    X

    ஓசூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்

    • அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலையில் காளேஸ்புரம் பகுதியில் தனியார் லேஅவுட் பகுதி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில், நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டின் வாசல் கதவையும் தட்டியதாகவும், மறுமுனையிலிருந்து வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை அடுத்து, அந்த மர்ம நபர்கள் நைசாக நழுவி சென்றதாகவும் கூறப்படுகிறது.

    பின்னர் அந்த நபர்கள், பூட்டியிருந்த வீடுகளை நோட்டம் விட்டுள்ளனர் இதில், சந்தோஷ்குமார் (29) என்ற தனியார் நிறுவன ஊழியரின் பூட்டியிருந்த வீட்டுக்குள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், உள்ள பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசை கொள்ளை பிடித்தனர்.

    பின்னர் அருகில் உள்ள பிச்சாண்டி என்பவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள லே அவுட் அலுவலகத்திலும் புகுந்து, உள்ளே சூறையாடியிருப்பதாக தெரிகிறது.

    மர்ம நபர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளின் முன்பு நடமாடுவது, அந்த 4 பேரில், 3 பேர் முகமூடி அணிந்திருப்பது ஆகியவை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

    நள்ளிரவில், அடுத்தடுத்து நடந்த இக்கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, அந்த குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதான சாலையிலிருந்து லேஅவுட் உள்ளே செல்லும் பகுதியில், தெருவிளக்கு வசதி இல்லாததால், மதுப்பிரி யர்கள் கும்பலாக மது அருந்துவதாகவும், மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இதனால், வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது என குடியிருப்பு மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மேலும் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அங்கு நேரில் சென்று, அச்சத்துடன் காணப்பட்ட குடியிருப்பு மக்களுக்கு ஆறுதல் கூறி, தைரியமூட்டினார்.

    அப்போது குடியிருப்பு மக்கள், தங்கள் குறைகளை கூறி, அவரிடம் முறையிட்டனர். இது சம்பந்தமாக, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, தெருவிளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர, ஏற்பாடு செய்வதாக பாலகிருஷ்ண ரெட்டி, உறுதியளித்தார்.

    Next Story
    ×