search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில்  பொது கழிப்பிடத்தால் நோய் தொற்று பரவும் அபாயம்
    X

    கோத்தகிரியில் பொது கழிப்பிடத்தால் நோய் தொற்று பரவும் அபாயம்

    • நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். குறிப்பாக மாலை, காலை நேரங்களில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பஸ் ஏறி செல்வார்கள்.

    இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் ஒன்று உள்ளது.

    இந்த கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பதால் இந்த கழிப்பிடத்தில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வெளியேறி வருகிறது.

    இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பஸ் வரும் வரை மூக்கை முடி கொண்டு அங்கேயே நிற்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது. துர்நாற்றம் காரணமாக நோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிப்பிடத்தை சரிவர சுத்தம் செய்து பொது மக்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நோய் தோற்று ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×