search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை கழிவுகளால் நோய் அபாயம்
    X

    கொட்டப்படும் குப்பை கழிவுகள்.

    குப்பை கழிவுகளால் நோய் அபாயம்

    • கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் உப்பம்பள்ளம் ஆற்றில் கொட்டப்படுகிறது,
    • பொதுமக்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், வெள்ளிசந்தையில் பாலக்கோடு - ஓசூர் மெயின் ரோட்டில் சாலை குறுக்கே உப்பம்பள்ளம் ஆறு ஓடுகிறது.

    பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரானது பாப்பன ஏரி வழியாக உப்பம்பள்ளம் ஆற்றில் கலந்து தண்டுகாரனஅள்ளி, கொண்டசாமனஅள்ளி உள்ளிட்ட 12 ஏரிகளுக்கு சென்று தும்பல அள்ளி அனையில் சேர்கிறது .

    இந்நிலையில் வெள்ளிசந்தையில் உள்ள உப்பம்பள்ளம் ஆற்றில் பிக்கனஅள்ளி, ஜக்க சமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் சேகரிக்கப்படும், வீட்டுக் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் உப்பம்பள்ளம் ஆற்றில் கொட்டப்படுகிறது,

    இதனால் ஆற்று நீர் மாசுபடுவது மட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது, மேலும் பன்றிகள் குப்பை கழிவுகளை கிளறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி,அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஆற்று நீர் மாசுபடுவதால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×