search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

    • பள்ளம்தோண்டப்பட்ட நிலையில் பல நாட்கள் ஆகியும் அவற்றை மூடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
    • குழிகளை முறையாக சரியாக மூடிட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொம்மிடி மெயின் ரோடு, தருமபுரி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பல்வேறு இடங்களில் தற்பொழுது பள்ளம்தோண்டப்பட்ட நிலையில் பல நாட்கள் ஆகியும் அவற்றை மூடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    வேலைகள் முடிக்கப்படாமல் இருந்து வருகின்றது. ஆபத்தான வளைவுகளில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. அந்தக் குழிகளை முறையாக சரியாக மூடிட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

    Next Story
    ×