search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் குறுகிய தரை பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
    X

    சாலையில் குறுகிய தரை பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

    • அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும்.
    • குறுகிய தரை பாலம் சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும்

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் அருகே நீண்ட காலமாக குறுகிய தரைப்பாலம் விரிவாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் தரைபாலம் மிகவும் குறுகியதாக, ஆற்று பாசன கால்வாய் செல்லுவதாலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பாலக்கோட்டில் இருந்து நான்கு ரோடு பிரிவு சாலை, புதூர் மாரியம்மன் கோவில், பேளாரஹள்ளி, எலங்காலப்பட்டி, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் சாலை வழியாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், பிரசித்தி பெற்ற புதூர் மாரியம்மன் கோவில், தமிழக அரசு அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் முன்பு குறுகிய தரை பாலம் சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×