என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் பரபரப்பு: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்-பொது மக்கள் மடக்கி போலீசில் ஒப்படைப்பு
- நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் திடீர்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் சேர்ந்தவர் சூர்யா (வயது 29). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஸ்வீட் கடையில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் சூர்யா தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென்று சூர்யா கழுத்தில் இருந்த வெள்ளி செயின் மற்றும் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தனர். அப்போது சூர்யா மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 3 பேரில் ஒருவரை ஆடை பிடித்து இழுத்த போது 3 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மூன்று வாலிபர்களையும் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 வாலிபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி யதில் கடலூர் தேவனா ம்பட்டினம் சேர்ந்தவர் கோகுல் (வயது 19), ஆகாஷ் (வயது 21), மணிகண்டன் (வயது 19) என தெரியவந்தது. மேலும் இந்த வாலிபர்கள் வேறு எங்கேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? அல்லது வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதா? என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்