என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் ரைஸ் மில்களில் டி.எஸ்.பி. திடீர் ஆய்வு
    X

    ரைஸ் மில்களில் அதிகாரிகள் சோதனை செய்த காட்சி.

    திண்டுக்கல் ரைஸ் மில்களில் டி.எஸ்.பி. திடீர் ஆய்வு

    • அரசின் வழிகாட்டுதல் முறைப்படி கடைப்பிடிக்கபடுகிறதா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவிட்டார்.
    • இரு முறை கொதி நிலைக்கு உட்பட்டு அரவை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசின் வழிகாட்டுதல் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

    திண்டுக்கல்:

    பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் வழங்கும் அரிசி, அரவை மில்களில் 2 முறை கொதிகலன்களில் அரைத்து வழங்கப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதல் முறைப்படி கடைப்பிடிக்கபடுகிறதா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவிட்டார்.

    அதன்படி டி.எஸ்.பி. ஜெகதீசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் குழுவினர் நந்தவனப்பட்டி மற்றும் பெரிய பள்ளப்பட்டி ஆகிய பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் அரவை மில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இரு முறை கொதி நிலைக்கு உட்பட்டு அரவை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசின் வழிகாட்டுதல் முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். மேலும் நெல், அரிசி மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.

    Next Story
    ×