search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம்- 11-ந்தேதி நடக்கிறது
    X

    தென்காசியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம்- 11-ந்தேதி நடக்கிறது

    • பொதுக்குழு கூட்டம் தென்காசி ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார்.

    தென்காசி:

    அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் தென்காசியில் உள்ள ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் மாநில சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இத்தகவலை நெல்லை, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×