என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான மகாலிங்கம்.
அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாவு
- மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
- அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே தலச்சங்காடு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 61).ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தலச்சங்காடு மெயின் ரோட்டில் மல்லேஸ்வரர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த மகாலிங்கத்திற்கு கலாவதி என்ற மனைவியும், ரேணுகா, ஹேமா, கிருத்திகா என்ற 3 மகள்களும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
Next Story






