search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு திட்டம் நிறைவேற்ற மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    திடக்கழிவு திட்டம் நிறைவேற்ற மன்ற கூட்டத்தில் தீர்மானம்

    • பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
    • இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் மனோ கரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சியில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணிமேற்கொள்ள மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் 18 வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×