என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்பு
    X

    குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்பு

    • பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி அலைகின்றன

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. மேலும் இக் காப்பு காட்டுப் பகுதிகளில் புள்ளிமான் இனங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன .

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி புள்ளிமான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி பொதுமக்கள் வாழக்கூடிய பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் பொம்மிடி சினிமா தியேட்டர் அருகில் புள்ளிமான் ஒன்று முருகர் மலைப்பகுதியில் இருந்து அதிவேகமாக ஊருக்குள் ஓடி வந்தது.

    இதைக்கண்ட பொதுமக்கள் வெறி நாய்களிடம் சிக்காமல் இருக்க புள்ளிமானை பிடித்து கால்களைக் கட்டி வைத்துவிட்டு மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனவர் செல்வராஜ் தலைமையில் வந்த வனத்துறையினர் மானை மீட்டு குண்டலமடுவு காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

    Next Story
    ×