search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே மாயமானவர் கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    கோப்பு படம்.

    நத்தம் அருகே மாயமானவர் கிணற்றில் பிணமாக மீட்பு

    • தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமானவர் என்பது தெரியவந்தது.

    நத்தம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கள ப்பேட்டையை சேர்ந்தவர் கோபி. (36) இவர் கடந்த 14-ம் தேதி குடும்பத்தினரு டன் மதுரை சென்று விட்டு நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டி ருந்த னர். அப்போது பரளிபுதூர்-சோதனை சாவடி அருகே வந்தபோது மாயமானார். இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அப்பகுதி யில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமான கோபி என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×