search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர்-உடுமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
    X

    திருப்பூர்-உடுமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

    • தினமும் ஆயிரக்கணக்கானோர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்கின்றனர்.
    • படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து திருப்பூருக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கிராமங்கள் ஆகியவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்கின்றனர்.

    ஆனால் போதிய அளவு பஸ்கள் இல்லாததால், தற்போது இயக்கப்படும் பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு உடுமலையில் இருந்து அதிக அளவில் பஸ்கள் இல்லை. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள், உடுமலையிலிருந்து திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×