என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணி
    X

    சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணி

    • மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
    • மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் பஸ் நிலைய பகுதியில் இருந்த மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆய்வின் போது, மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×