என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது
பாசனத்திற்காக வரதமாநதி, குதிரையாறு அணைகளில் தண்ணீர் திறப்பு
- பழனி அருகே வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக அணைகளுக்குநீர்வரத்து அதிகரித்தது.
- பாலாறு அணையில் இருந்து இன்றுமுதல் 120 நாட்களுக்கு 1220 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி அருகே வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக அணைகளுக்குநீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பழனி பகுதியில் நேற்றுஇரவு முதல் சார ல்மழை பெய்து வருகிறது. வரதமாநதி அணைஅதன் முழுகொள்ளளவான 66 அடியை எட்டி கடந்த சில நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 120 நாட்களுக்கு 720 கனஅடிநீர் வெளியேற்ற ப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி பொதுப்பணி த்துறையினர் இன்று காலை அைணயிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட்டனர். இதன் மூலம் 18 பாசன வாய்க்கா ல்கள் நிரப்பப்பட்டு திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 6000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி ெபறும். அணைக்கு 239 கனஅடிநீர் வருகிறது.
மொத்தம் 331 மி.கனஅடி நீர் இருமாவட்ட பாசனத்தி ற்கும் திறப்பதற்கு நடவடி க்கை எடுக்கப்பட்டு ள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்பட்டி, குதிரையாறு அணையில் நீர்வரத்து 675 கனஅடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 78 அடியாகும். தற்போது 64 அடி நீர்மட்டம் உள்ளது. இங்கிருந்து 120 நாட்களுக்கு 330 கனஅடிநீர் பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. மேலும் பாலாறு அணையில் இருந்து இன்றுமுதல் 120 நாட்களுக்கு 1220 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் அணைகளை கண்காணித்து வருகின்றனர்.
பருவமழை கைகொடுத்த நிலையில் விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






