என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகை
- அரசு தொடக்கப்பள்ளி குழந்தை களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகை நேற்று நடைபெற்றது.
- காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகையில் தடங்கம் ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர்.
தொப்பூர்,
தமிழக அரசால் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகை நேற்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி அவ்வைவழி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகையில் தடங்கம் ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர்.
இதில் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி, சமையலர் விஜயசாந்தி, வசந்தி, சௌந்தாமணி, மாவட்ட துணை அமைப்பாளர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி தருமபுரி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் அவ்வை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






