search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் இணையதளம் முடங்கியதால் பத்திர பதிவு பணிகள் பாதிப்பு
    X

    இணையதளம் முடங்கியதால் செயல்படாமல் உள்ள அலுவலகம்.

    ஒட்டன்சத்திரத்தில் இணையதளம் முடங்கியதால் பத்திர பதிவு பணிகள் பாதிப்பு

    • ஒட்டன்சத்திரத்தில் இணையதளம் முடங்கியதால் பத்திர பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது
    • தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நகரான ஒட்டன்சத்திரத்தில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

    இங்கு செயல்படும் சார்பதிவாளர் பத்திர பதிவு அலுவலகத்தில் தினசரி நூற்றுக்கணக்கானோர் பத்திர பதிவு செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு மேலும் அதிகரிக்கும். கடந்த 2 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ஆனால் அலுவலகத்தில் இணையதளம் முடங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×