search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை பணிக்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கோப்பு படம்.

    மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை பணிக்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    • ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
    • தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு ரூ.1296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கியது.

    இதற்காக லோயர்கேம்ப் குறுவனூத்து பாலம் வண்ணாத்துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.

    நேற்று காலை இந்த தடுப்பணை பணிகளுக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று காலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது. பணிகள் விரைவில் முடிந்ததும் வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×