search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறை தீர்க்கும் முகாமில் 366 மனுக்கள் பெறப்பட்டன
    X

    மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை கலெக்டர் சரயு வழங்கினார். அருகில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளார்.

    குறை தீர்க்கும் முகாமில் 366 மனுக்கள் பெறப்பட்டன

    • முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 366 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 366 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×