என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் கிடந்த நாட்டுதுப்பாக்கி மீட்பு
    X

    சாலையோரம் கிடந்த நாட்டுதுப்பாக்கி மீட்பு

    • 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் முட்புதரில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது.
    • போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் நேற்று வத்தல்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் முட்புதரில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த துப்பாக்கி யாருடையது? யார் அங்கு வீசி சென்றார்கள்? என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×