search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்தியவர் சிறையில் அடைப்பு
    X

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.

    ரேஷன் அரிசி கடத்தியவர் சிறையில் அடைப்பு

    • தருமபுரியில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • கடத்தலில் தலைமறைவான ராமன்கு மாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜய குமார் தனிப்படை தருமபுரி - பாலக்கோடு சாலையில் மேற்கொண்ட வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தே கப்படும்படி அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் வேனில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த வேட்டராயன் மகன் சிங்காரவேலன் என்பவரை கைது செய்த போலீசார் அவருக்கு நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைத்தனர்.

    இந்த கடத்தலில் தலைமறைவான ராமன்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலில் கைப்பற்றப்பட்ட 550 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்

    Next Story
    ×