search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    இரட்டை பிள்ளையாருக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.

    ராசிபுரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 15 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • தொடர்ந்து இரட்டை பிள்ளையாருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இரட்டைப் பிள்ளையாருக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சீயக்காய், மஞ்சள், திருமஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், தேன், கரும்பு சாறு, ஆரஞ்சு சாறு உள்ளிட்ட 15 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து இரட்டை பிள்ளையாருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பூஜையில் ராசிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே இரட்டைப் பிள்ளையார் கோவில் ராசிபுரத்தில் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×