search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே அரியவகை மரநாய்கள் மர்மமான முறையில் சாவு
    X

    இறந்த மரநாய்களை உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

    வாசுதேவநல்லூர் அருகே அரியவகை மரநாய்கள் மர்மமான முறையில் சாவு

    • வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
    • அரியூர் மலையில் உடும்பு உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்கள் உள்ளன.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியூர் மலையை ஒட்டியுள்ள விவசாய பகுதியில் 2 அரிய வகை மரநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக புளியங்குடி வனத்துறை யினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த புளியங்குடி வனவர் மகேந்திரன் தலைமை யிலான வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு வடக்குப்புதூர் கால்நடை மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வு க்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து புளி யங்குடி வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியூர் மலையில் அரியவகை வன உயிரினங்களான எறும்புத்திண்ணி, உடும்பு, முள் எலி, முள்ளம் பன்றி, மரநாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகை யான வன உயிரினங்கள் உள்ளன. இவை அவ்வ போது மலை அடிவார பகுதியில் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருவதாக அப்பகுதி யினர் கூறுகி ன்றனர். எனவே அரியூர் மலையை பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவித்து அவற்றை பாதுகாக்க உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×